mardi 5 février 2013

மழை



















சோ...... என்று பெய்த மழை
சொல்லாமல் வந்த மழை
சோம்பி இருந்த என் மனசு
சோம்பலை ஓரத்தில் தள்ளி வைக்க.....
சொட்டுச் சொட்டாய் வந்த மழை
முற்றத்தில் முத்தமிட ,
வந்த புழுதி வாசம் மூக்கையடைக்க.....

வண்டுவுக்கும் சிண்டுவுக்கும் கொண்டாட்டம்
அவர் கொண்டாடம் காகிதகப்பலில் தெரியவர.....
 நானும் குழந்தையாகிப் போனாலும் , 
பெய்த மழையின் வேகத்தில்
வீட்டுக்கூரை முகடு பிரிக்க !!!!
என் வீட்டினுள் எட்டிப் பார்த்தது
அழையாத விருந்தாளியாய் ,
 நான் பானைகளால் கவசம் போட்டாலும்
அங்கு என் ஏழ்மை சிரித்தது எக்காளமாய்.....

மைத்திரேயி
05/02/2013

Aucun commentaire:

Enregistrer un commentaire