பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும்.
mardi 5 février 2013
மழை
சோ...... என்று பெய்த மழை
சொல்லாமல் வந்த மழை
சோம்பி இருந்த என் மனசு
சோம்பலை ஓரத்தில் தள்ளி வைக்க.....
சொட்டுச் சொட்டாய் வந்த மழை
முற்றத்தில் முத்தமிட ,
வந்த புழுதி வாசம் மூக்கையடைக்க.....
வண்டுவுக்கும் சிண்டுவுக்கும் கொண்டாட்டம்
அவர் கொண்டாடம் காகிதகப்பலில் தெரியவர.....
நானும் குழந்தையாகிப் போனாலும் ,
பெய்த மழையின் வேகத்தில்
வீட்டுக்கூரை முகடு பிரிக்க !!!!
என் வீட்டினுள் எட்டிப் பார்த்தது
அழையாத விருந்தாளியாய் ,
நான் பானைகளால் கவசம் போட்டாலும்
அங்கு என் ஏழ்மை சிரித்தது எக்காளமாய்.....
மைத்திரேயி
05/02/2013
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire