போய்வா காதலா போய்வா !!!
என்னை பிடித்த என் காதலா.....
என்னை சீண்டுவதிலே
என்ன இன்பம் உனக்கு??
உள்ளம் குமுறியே
ஊமையான நான் ,
பாடுவேன் என்று
ஏன் நினைக்கின்றாய்??
உன் பார்வையில்
நான் ஒரு கொடுமைக்காரி....
அப்படியே இருப்பேன் நான் உனக்கு.
வார்த்தை ஊசியால்
என்மனதை குத்துவதை விட்டுவிடு...
என்மனம் பாறையாகி
நாளாச்சு என்காதலா .
எங்கள் காதல் வளரும்
என்று எனக்குத் தெரியவில்லை ...
என் கை பிடிக்க முதலே
என் கண்ணீல் நீர் வருவது
உனக்கு இன்பம்.......
உன் நினைவை மறக்க
நான் நினைக்கின்றேன்
போய்வா காதலா போய்வா...
நாம் நடந்த கடற்கரையில்
என்கால் ஒற்றைத்தடம் பதிக்கும் ........
போய்வா காதலா போய்வா!!!!
மைத்திரேயி
23 02 2013
Aucun commentaire:
Enregistrer un commentaire