mercredi 30 janvier 2013

ஏன் உதைத்தீ( ர )ர்களே ??

ஏன் உதைத்தீ( ர )ர்களே ??


இருட்டில் இருந்த உங்களுக்கு
வெளிச்சம் காட்டியவர்கள் நாங்கள்
உங்கள் பசியெடுத்தபொழுது
குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்.....
உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய்
துடித்தவர்கள் நாங்கள்.......

உங்கள் வெம்பலுக்கும் தேம்பலுக்கும்
குளிர்நிலாவாய் இருந்தோம் நாங்கள்.....
எங்களுக்கு என்று ஒரு சந்தோசம்
நீங்கள் கண்டதுண்டா ??

உங்கள் வாழ்கையில்
மெழுகுதிரியாய் எரியும் எங்களை
ஒருகணம் உங்கள் ,
பார்வை திரும்பியதுண்டா ??

உங்கள் ஏற்றம் இறக்கம்
எதிலும் ஒன்றாய் கலந்த
எங்களை
ஏன் எட்டி உதைத்தீ(ர)ர்களே ??

மைத்திரேயி
19/01/2013


Aucun commentaire:

Enregistrer un commentaire