mercredi 15 janvier 2014

குறிஞ்சா புட்டு







எனக்கு சின்ன வயசில அம்மா குஞ்சி இந்த புட்டு செய்து தாறவா. போன கிழமை நான் கடைக்கு போன நேரம் குறிஞ்சா மா வாங்கினனான் . குறிஞ்சா இலை சலரோக ஆக்களுக்கு நல்ல பலனை குடுக்கிற இயற்கையான இலை. இந்த இலை  கொஞ்சம் கைக்கும் . அதுக்கு விரும்பினால் சகரின் போடுங்கோ .
என்ன வேணும் :
 
குறிஞ்சா இலை ஒரு கட்டு .

சிவப்பு பச்சை அரிசி மா 500 g.
உப்பு தேவையான அளவு.
தேங்காய் பூ தேவையான அளவு .
பட்டர் 20 g.
கூட்டல் :
 
குறிஞ்சா இலையை வெய்யிலிலை காய விடுங்கோ . இலை சுறுண்டு வந்தால் பிறகு கல்லு உரலிலை போட்டு மாவாய் வாறவரைக்கும் இடியுங்கோ. இடிச்ச மாவை அரிதட்டிலை போட்டு அரியுங்கோ .அரிச்ச குறிஞ்சா இலை மாவையும் சிவப்பு பச்சை அரிசி மாவையும் கலந்து சுடுதண்ணியம் விட்டு புட்டுக்கு குளைக்கிற மாதிரி பதமாய் குளையுங்கோ. கையாலை சின்ன சின்ன  குறுணியாளாய்
உலுத்துங்கோ. தேங்காய் பூவை கலந்து அவிய விடுங்கோ. புட்டு அவிஞ்சால் பிறகு பட்டரை போட்டு கிளறி விடுங்கோ. இப்ப குறிஞ்சா புட்டு நீங்கள் சாப்பிடலாம் .



மைத்திரேயி
14/01/2014

mardi 14 janvier 2014

என்ன நியாயம் ????


என்ன நியாயம்???



கட்டிக்கரும்பே மரகத மணியே
பவழம் பவழம் எம் இதழ்கள்
என்று சொன்னவர்களும்
நீங்கள்தான் .......
 

கயல் விழி என்றும் ,
எம் விழி அம்பால்
பெட்டிப் பாம்பாய் அடங்கினோம்
என்று ,

சொன்னதும் நீங்கள் தான் ........
 

எங்கள் கொடியிடை அசைவில் ,
உங்கள் மதி
தறி கேட்டுப் போனதாய்
சொன்னதும் நீங்கள்தான் ........
 

பாலைவனமாய் இருந்த
உங்கள் வாழ்வில்
கோடைத் தென்றலாய்

நாங்கள் வந்தோம்
என்று
சொன்னவர்களும் நீங்கள் தான் ......

இப்பிடி,

சும்மா இருந்த எங்களை
உங்கள் கற்பனை குதிரைகளால்
மேய்ந்து விட்டு !!!!!!!!
இப்பொழுது மட்டும்
மோகம் கலைந்தவுடன்
" இல்லாள் "
என்று சொல்வது என்ன நியாயம் ???



 மைத்திரேயி
10/01/0/2014