பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும்.
mercredi 2 janvier 2013
எட்டி உதை தருவீரா ??
தேனினும் இனிய தெள்ளு தமிழில்
தெவிட்டிடாது பாட வந்தேன் உங்கள் முன்
பாவிசைக்க வந்தாலும்
பக்குவமாய் பாடுவேனா ??
தீர்ப்பைச் சொல்வீர் உங்கள் கையால்!!
ஏறுமுகமாய் இருந்தவேளை
பருத்தி விற்றது என்நகரம்
அப்பதட்டிகளும் அடுக்கடுக்காய்
நிரைகட்டியது ஒருகாலம்
சுவையான வடையும்
என்நகரில் சுவைக்கவே ஓடிவருவர்
அந்நகரம் பெற்றெடுத்த ஆரணங்கு
என்பெயர் மைத்திரேயி !!
ஆவலாய் வந்தவளை
அள்ளிக் கொள்வீரா ??
எட்டியே நின்று
எட்டி உதை தருவீரா ??
மைத்திரேயி
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire