lundi 24 juin 2013

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!


என் நிம்மதி எங்கே என்று

உன்னிடமே கேட்டேன் பார்,

கொள்ளை அடித்தவனிடமே

போய் புகார் செய்தமாதிரி

என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........



உன் நினைவுகளோ

என்னை மூழ்கடித்து விட்டது

ஒரு ஆறு கட்டுமரத்தில்

ஏறி இருந்தது போல !!!!!!!!



என்னைக் கொள்ளை கொண்டவனே

நான் சுதந்திரமாய் சிரித்து

கனகாலமாகி விட்டதடா .

நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன்

நீயோ ,

ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய்

நான் அழமுயற்சி செய்தாலோ ,

ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய்

நீ என்னதான் சொல்லவருகின்றாய் ?????????



நான் சுகமாக இருக்கின்றேன் என்று

ஒருவரிடமே சொல்வதில்லை.......

ஏதோ இருக்கின்றேன்

என்றுதான் சொல்கின்றேன் .

நான் விரைவாக அமைதியான

இடத்திற்கு ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ,

உன்னைபற்றி தனிய இருந்து

யோசனை செய்வதற்கு

மைத்திரேயி

19/06/2013

Aucun commentaire:

Enregistrer un commentaire