mercredi 15 janvier 2014

குறிஞ்சா புட்டு







எனக்கு சின்ன வயசில அம்மா குஞ்சி இந்த புட்டு செய்து தாறவா. போன கிழமை நான் கடைக்கு போன நேரம் குறிஞ்சா மா வாங்கினனான் . குறிஞ்சா இலை சலரோக ஆக்களுக்கு நல்ல பலனை குடுக்கிற இயற்கையான இலை. இந்த இலை  கொஞ்சம் கைக்கும் . அதுக்கு விரும்பினால் சகரின் போடுங்கோ .
என்ன வேணும் :
 
குறிஞ்சா இலை ஒரு கட்டு .

சிவப்பு பச்சை அரிசி மா 500 g.
உப்பு தேவையான அளவு.
தேங்காய் பூ தேவையான அளவு .
பட்டர் 20 g.
கூட்டல் :
 
குறிஞ்சா இலையை வெய்யிலிலை காய விடுங்கோ . இலை சுறுண்டு வந்தால் பிறகு கல்லு உரலிலை போட்டு மாவாய் வாறவரைக்கும் இடியுங்கோ. இடிச்ச மாவை அரிதட்டிலை போட்டு அரியுங்கோ .அரிச்ச குறிஞ்சா இலை மாவையும் சிவப்பு பச்சை அரிசி மாவையும் கலந்து சுடுதண்ணியம் விட்டு புட்டுக்கு குளைக்கிற மாதிரி பதமாய் குளையுங்கோ. கையாலை சின்ன சின்ன  குறுணியாளாய்
உலுத்துங்கோ. தேங்காய் பூவை கலந்து அவிய விடுங்கோ. புட்டு அவிஞ்சால் பிறகு பட்டரை போட்டு கிளறி விடுங்கோ. இப்ப குறிஞ்சா புட்டு நீங்கள் சாப்பிடலாம் .



மைத்திரேயி
14/01/2014

Aucun commentaire:

Enregistrer un commentaire