பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும்.
mardi 14 janvier 2014
என்ன நியாயம் ????
என்ன நியாயம்???
கட்டிக்கரும்பே மரகத மணியே
பவழம் பவழம் எம் இதழ்கள்
என்று சொன்னவர்களும்
நீங்கள்தான் .......
கயல் விழி என்றும் ,
எம் விழி அம்பால்
பெட்டிப் பாம்பாய் அடங்கினோம்
என்று ,
சொன்னதும் நீங்கள் தான் ........
எங்கள் கொடியிடை அசைவில் ,
உங்கள் மதி
தறி கேட்டுப் போனதாய்
சொன்னதும் நீங்கள்தான் ........
பாலைவனமாய் இருந்த
உங்கள் வாழ்வில்
கோடைத் தென்றலாய்
நாங்கள் வந்தோம்
என்று
சொன்னவர்களும் நீங்கள் தான் ......
இப்பிடி,
சும்மா இருந்த எங்களை
உங்கள் கற்பனை குதிரைகளால்
மேய்ந்து விட்டு !!!!!!!!
இப்பொழுது மட்டும்
மோகம் கலைந்தவுடன்
" இல்லாள் "
என்று சொல்வது என்ன நியாயம் ???
மைத்திரேயி
10/01/0/2014
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire